வெள்ளி, 6 மே, 2016

ஜனநாயகமே பொங்கி எழு



ஜனநாயகமே  பொங்கி எழு


புரட்சியாளன் பிறப்பதில்லை
உருவாக்கப்படுகிறான்!

சர்வாதிகாரம்
தலை தூக்கும் போது,
ஜன சமுத்திரம்
பொங்கி எழுவது
அவசியம்!

உழைப்பை சுரண்டி
குருதி குடிக்கும்
குள்ள நரி யார்?
காயப்படும் எறும்பும்
கடிக்க முற்படும்
அடிபடும் நாமும்
துடிப்பது தவறல்லவே!

ஓட்டுக்காக
நோட்டு வாங்கி
ஜனநாயக உரிமையை
அடகு வைப்பதா?

பாட்டாளிக்கும்
பாட்டுக்கும்
உயிர் கொடுத்த
பட்டுக்கோட்டை
பாடகரை மறக்கலாமா?

குண்டுக்கு இரையான
தேச பிதாவின்
தேசத்தை மறக்கலாமா?

ஜாதி, மதம் பேசி
குருதி ஆறு
ஓடுவது நியாயமா?

ஏழைகள் இருக்கலாம்
வறுமை இருக்க கூடாது...
வலிமை இருக்கலாம்
வன்முறை இருக்க கூடாது...

மனித வாழ்வு
மகிழ்ச்சியாக இருக்க
உண்ண உணவு
உடுக்க உடை
உயர பொருளாதாரம்,
இருக்க இடம்
இந்த நான்கும்
இருந்தால்...
நாட்டில் எதற்கு
காவல் நிலையம்
எதற்கு சிறைச்சாலை?

கலகம் இன்றி
உலகம் இருந்தால்...
உழைத்து வாழ்வோர்
உயர்வு பெறுவர்!

சுரண்டும் வர்க்கம்
சுருண்டு போகட்டும்
வழங்கும் வர்க்கம்
வாரி வழங்கட்டும்
உழைக்கும் வர்க்கம்
உள்ளம் சிரிக்கட்டும்!

மே தின புரட்சி
மேதினில் வளர்ச்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக