ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

வாக்களர்களே சற்றே நினையுங்கள்



                         வாக்களர்களே  சற்றே நினையுங்கள்


தேர்தல் என்பது ஒரு மகாபாரதம்
சூழ்ச்சிகளில் சிறந்த வேட்பாளர் உண்டு
மக்களிடையே பல வாக்குறிதிகள் /கொடுபத்துண்டு
தேர்தல் என்பதே ஒரு நாடக மேடை என சொல்வதுண்டு !

கட்சிக்கு செய்ததை விட  தொகுதிக்கு என்ன செய்வாய்
மாதம் ஒரு முறை மக்களை நேரில் சந்திப்பாயா
மக்கள் குறைக்   கேட்டு  தீர்ப்பாயா
இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுவாயா !

மக்களே வாக்கினை அட்சய பாத்திரமாக    நினையுங்கள்
அதை பிச்சை இட்டு பிட்சைக்காரனாக நிற்க்காதிர்கள் 
பணம் கொடுபவர்களுக்கு   வாக்கு அளிக்காதிர்கள்
படித்த நற்பண்போடு உள்ளவர்களுக்கே வாக்களியுங்கள் !

அரசியல் ஆதாயம்  தேடுபவர்களை புறக்கணியுங்கள்
மக்களை பலிகடா ஆக்கும் வேட்பாளரை எதிர்த்திடுங்கள்
வாக்கினை பொன்னாக  கருதி  வாக்கு  அளித்திடுங்கள்
நல்ல தலைவனை நியமித்து நாட்டிற்கு நலம் சேர்த்திடுங்கள் ! 


ரா.பார்த்தசாரதி
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக