வியாழன், 30 மே, 2024

Periyaswamy thriumana vazhthumadal

 



மணமகன்: எம் பெரியசாமி                                                    இடம் : மேலரதவீதி                                மணமகள் : எம்.பேச்சியம்மாள்                                                பாளையங் கோட்டை 
 
 அருள்மிகு  சுப்ரமணிய சுவாமி சன்னதியில் ஓர திருமண மேடை  
  இன்னாருக்கு   இன்னார், என்று  எழுதிவைத்த திருமண  மேடை,

2. இருவீட்டாரும்  இணைந்தே  நடத்திடும்  விழா ,
    உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும்  விழா !

3. திருமணம் என்றாலே உற்றார், உறவினர்  
    அகிலத்தில் சிறந்தது தாய்,தந்தையர்  ஆசியே !

6.  திருமதி என்பது  ஒரு வெகுமதி என்று சொல்வது வழக்கம் 
     திருமதியின் பெயரோ பேச்சியம்மாள்  என்று அழைப்பது  பழக்கம்   !

5.   காலங்களும், கோலங்களும், என்றும்  மாறும் 
     கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும்!

6. .மலர்போன்று  மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

7.   பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
     புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

8,  கணவன் என்றாலே,  கண் + அவன்    என்பதாகும் 
    அவன் வழியே  உலகை காண்பவள்  மனைவியாகும் !
  
09.. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை

10,. அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
      பண்பும், பயனும்  அது.   என்பது  வள்ளுவர் வாக்கு. 

      ரா.பார்த்தசாரதி .  8148111951